இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்?

Fakrudeen Ali Ahamed
0
ஒரு சினை முட்டை கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் (identical twins) என்று இருக்கும்.
சினை முட்டை
அல்லது இரண்டு முட்டைகள் தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்க ளுடன் சேர்ந்து இரண்டும் சினை முட்டையாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் (fraternal twins) தோன்றுவது உண்டு.

சில சமயம் ஒரு சினை முட்டை இரண்டாகப் பிரியும் போது முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டி கொண்டு அப்படியே கர்ப்ப பையில் வளர்ந்து குழந்தைகள்

ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறப்பார்கள் (conjoined twins). இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சியாமிஸ் இரட்டையர் என்றும் சொல்லுவது உண்டு.

இரட்டையர் பிறப்பதற்கு காரணங்கள் என்ன?

சில இனங்களில் இயற்கை யாகவே இரட்டையர் பிறக்கின்றனர். நைஜீரியர்களில் இரட்டையர் அதிகம். ஜப்பானியர் களில் குறைவு. அம்மா வழியில் இரட்டையர் இருந்தால் மகளுக்கும் இரட்டையர் பிறக்க வாய்ப்பு அதிகம்.
இரட்டையர் பிறப்பில் அப்பாவின் பங்கு குறைச்சல் தான். முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு இரட்டையர் பிறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 
 
ஏற்கனவே குழந்தை இருக்கிறவர் களுக்கு அடுத்து இரட்டையர் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வர்!

ஒரு சினை முட்டை ஏன் இரண்டாகப் பிரிய வேண்டும் என்பதற் கெல்லாம் சரியான மருத்துவக் காரணங்கள் இல்லை. ஆனால் தற்போது குழந்தை பிறக்க வேண்டும் என்று 
சியாமிஸ் இரட்டையர்
சில பெண்களுக்கு அதிக அளவில் முட்டைகள் உருவாக கொடுக்கப்படும் மருந்துகளி னால் சினை முட்டை இரண்டாகப் பிரியக் கூடும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்

நம் ஊரில் இரட்டையாக ஒட்டியிருக்கும் பழங்களை, காய்களை சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்று சொல்லி என் அம்மா எங்களை (என் அக்காவையும், என்னையும்) இவற்றை தொடக்கூட விடமாட்டாள்.
ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வதே போதும் போது மென்று இருக்கிறது, இதில் இரட்டையா? என்று தோன்றும். என்னைக் கேட்டால் ஒரே தடவை கருத்தரித்து,

இரண்டு குழந்தைகள் என்றால் பரவாயில்லை என்று சொல்லுவேன். ஒரு குழந்தை பிறந்து சில, பல வருடங்கள் கழித்து, திரும்பவும் மசக்கை, வாந்தி….வேண்டாமடா சாமி!
இரட்டைக் குழந்தை பிறந்தால் ‘இன்னொரு குழந்தை எப்போ? ஒன்றுடன் நிறுத்திக் கொண்டு விட்டாயா?’ என்ற கேள்விகள் வராது. அக்கா, அண்ணா, தம்பி, தங்கை இல்லையா என்று நம் குழந்தைகளைப் பார்த்து யாரும் கேட்கவும் மாட்டார்கள்!

நகைச்சுவை போதும், விஷயத்திற்கு வருவோம். இரட்டையர் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு ஒரே சாயலில் இருப்பது மற்றவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம்.

ஆனால் இளம் தாய்க்கு இது ஒரு மிகப்பெரிய சவால். இரட்டைக் குழந்தைகள் என்று தெரிந்து விட்டால், முதலிலிருந்தே எல்லா வற்றையும் திட்ட மிடுங்கள். 
இரட்டைக் குழந்தை பிறந்தால்
ஒரு குழந்தையா னாலும் திட்டமிடுதல் அவசியம். இரண்டு குழந்தைகள் என்றால் இந்த அவசியம் இரண்டு மடங்காகிறது. 
 
இரட்டைக் குழந்தைகளி னால் சந்தோஷம் இரட்டிப்பானால், வேலையும் இரு மடங்காகிறது. அதற்கும் நீங்கள் தயாராக வேண்டும்.

இரட்டை கர்ப்பம் தரித்தவர்க ளுக்கு மருத்துவரின் தொடர் பரிசோதனைகள் மிகவும் அவசியம். கருத்தரித்த வுடனே சிலர் சொல்லுவார்கள் அறிவுரை என்ற பெயரில் இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டு மென்று.
தேவை யில்லாத அறிவுரை இது. போஷாக்கான உணவை சாப்பிடுங்கள். அதிக அளவு வேண்டாம். அனாவசியமாக உடல் பருத்து விடும்.

ஏற்கனவே இரட்டை பெற்றுக் கொண்டிருப்ப வரிடம் ஆலோசனை கேட்கலாம். முதல் தேவை குழந்தை களைப் பார்த்துக் கொள்ள ஒருவர். 
 
உங்கள் அம்மாவோ, மாமியாரோ அல்லது உங்களுக்கு மிகவும் தெரிந்த பெண்மணியா கவோ இருக்கலாம்.

நீங்கள் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் இன்னொரு குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)