குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது?

Fakrudeen Ali Ahamed
0
என் மகளுக்கு 16 வயதாகி விட்டது. மாடர்னாக உடை அணிகிறாள். பொது அறிவு விஷயங்களில் தேறியிருக்கிறாள். விஞ்ஞானம், இலக்கியம் எல்லாம் பேசுகிறாள்.
தனி அறையில் தூங்க வைப்பது
ஆனால் தனியாக அவளுக்கான படுக்கை அறையில் படுப்பதில்லை. குழந்தை போல் எங்களுடனே இரவிலும் ஒட்டிக் கொள்கிறாள் என்று குறைபடும் தாய்மார்கள் ஏராளம்.

தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத் தான் ஏங்கும். 
 
தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியா விட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்து கொள்கிறது. 

தாயின் அரவணைப்புக்குள் நிம்மதியாக தூங்கவும் விரும்புகிறது. அம்மா அருகில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அழத் தொடங்கி விடுகிறது. 
 
தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ கிடைத்த பிறகே அமைதியாகிறது.
தாய்மையின் கதகதப்பில் தூங்க விரும்பும் குழந்தைகள் 15, 16 வயதிலும் அதையே தொடர விரும்பும் போது தான் பிரச்சனையாகிறது. 
 
சிறுவர், சிறுமியர் பெற்றோரோடு தூங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வளர்ந்த பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் 
 
அம்மா பிள்ளையாகவே இருந்து இளம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.

சில குழந்தைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடும்.
ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருக்கும். 
 
இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கை தான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. 
 
இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. 

இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது. சிறிய குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது.

பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். 
 
இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். 

அதே நேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
இரவில் அழும் போது
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்க வைக்கும் போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவ தில்லை. 
 
அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள்.

இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும் போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்... இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள்.
குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப் போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்து வதில்லை.

குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்க வைப்பவர்கள் தங்கள் இரவு நேர நெருக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு.

அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு.

இது போக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக 
 
கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்க வைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்க வைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. 
 
இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா–பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப் படுகிறது.

அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது. 
 
ஆனால் நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.

இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். 
 
முதல் குழந்தை தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள் அன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். 
 
இப்படிச் செய்யும் போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தை யிடமும் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும்.
நாலு, ஐந்து வயதில் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். 
 
இந்தக் குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் நெருக்கத்தைக் கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும்.

அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு. 7–8 வயதாகும் போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள்.
தனியறையில் தூங்கும்
இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத் தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். 
 
இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது.

இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை 
 
நல்ல விதமாய் பெற்றோரே எடுத்துச் சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.

அவர்களின் மனோ ரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம்.
கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக்
பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.
இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும் வரை படுத்திருக்கலாம். 
 
நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள். 

சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)