அதிகரித்து வரும் சிசேரியன் தேவை தானா?

Fakrudeen Ali Ahamed
அமெரிக்காவி ற்கும், ஈராக்கி ற்கும் சண்டை வரக்கூடிய சூழல் உண்டான போது சண்டை வந்து விட்டால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காதே 
என்பதற்காக ஏராளமான பெண்கள் சிசேரியன் செய்து கொண்டார்கள் என்பதை நான் கேள்வி பட்டிருக் கிறேன். 

அதுபோல 2௦௦௦ ஆண்டு முடிந்து புதிய நூற்றாண்டு பிறக்கிற நேரத்தில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என்கிற 

நோக்கில் உலகம் முழுக்க சிசேரியன் செய்து கொண்ட வர்கள் அதிகம்.

ஆனால் நமது நாட்டில் எந்த காரணமும் இன்றி சிசேரியன் அதிகரித்து வருவது வருந்தத் தக்க விஷய மாகவே இருக்கிறது. 

வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா வில் 15 சதவீத த்திற்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் தேவை இல்லை என 

உலக சுகாதார மையம் கூறிய போதும் இந்த குறிப்பிட்ட அளவை விட ஏழு மடங்கு அதிக மான சிசேரியன் நடை பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன.

அதிலும் நம்ம தமிழ் நாட்டில் அதிகமான சிசேரியன் நடை பெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. 
அரவிந்த் கூறியது போல இரண்டு நாள் டூர் போயிட்டு வருவது போல சிசேரியன் பண்ணிட்டு வந்து டுறாங்க.

ஆனால் இதனோட பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்ட தாக தெரிய வில்லை. மனித உடல் மிகவும் சூட்சுமமாக செய்யப் பட்ட இயந்திரம். 

இந்த இயந்தி ரத்தில் உள்ள நரம்புகள் மட்டுமே நவீன கால மருத்து வத்திற்குத் தெரிந்தி ருக்கிறது. 

இதற்கும் மேலாக பிராண சக்தியைக் கொண்டு செல்லக் கூடிய நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்பட வேண்டும்.

நமது சித்தர்களும், யோகிகளும் இந்த நாடிகளைப் பற்றிக் கூறும்போது மேலை நாட்ட வர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.

காரணம், நரம்பு களைப் பற்றிய நுட்பங் களைத் தெரிந்து கொள்ள MRI Scan இருப்பது போல நாடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மருத்துவ கருவிகள் இல்லாமல் இருந்ததே. 

ஆனால் சமீப காலத்தில் கிரிலியன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டக் கருவியால் நாடிகளையும் படமெடுக்க முடிகிறது . 

இந்த கருவியால் பட மெடுக்கும் போது நாடிகள் மட்டு மல்லாது நமது யோகிகள் கூறிய யோகச் சக்கரங்களை யும் பார்க்க முடிகிறது.

நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது.

(இருப்பான தேகம் எழுபத்திரண்டா யிரமான நாடிதனில்,

ஏலப்பெரு நாடி ஒக்கத் தசமத் தொழிலை

ஊக்கத் தச வாயுக்கள் தக்க படியானதே சார்பு.- அகஸ்தியர் )
இந்த நாடிகளில் முக்கிய மான நாடியாக சுழுமுனை நாடி சொல்லப் படுகிறது.

சுழுமுனை நாடியி லிருந்தே பிற நாடிகளுக்கு vital energy எனச் சொல்லக் கூடிய பிராண சக்தி பகிர்ந்து அளிக்கப் படுகிறது. 

இந்த சுழுமுனை நாடியே உடல் உள்ளுறுப்பு களுக்குப் பிராண சக்தியை வழங்கக் கூடிய முக்கியமான ஓடு பாதை .

சுழுமுனை நாடி உடலின் மையத்தில் முன்னும் பின்னுமாகச் செல்கிறது (REN channel, DU channel) 

இதனை போகமஹரிஷி யால் கற்றுக் கொடுக்கப் பட்ட சீன வைத்தியமும் ஏற்றுக் கொள்கிறது. 

சிசேரியன் செய்யும்போது இந்த முக்கிய மான நாடி வெட்டப் படுகிறது. 

இதன் காரண மாக மண்ணீரல் (sp12, sp13)., கிட்னீ,(ki12, ki13) பித்தப்பை போன்ற உள்ளுறுப்பு களுக்குச் செல்லக் கூடிய பிராண ஒட்டப் பாதை தடை செய்யப் படுகிறது.

இதன் தொடர் விளைவுகள் என்ன வென்று பார்ப்போமா!

மண்ணீ ரலுக்குச் சக்திக் குறைவு ஏற்படும் போது, மண்ணீரலின் விஷேச குணமான "பிடித்து வைக்கும் தன்மை" குறைகிறது. 

இதனால் உடல் பருமன் உண்டா கிறது. குடல் இறக்கம், மூலம், உதரவிதான இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் , போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

கிட்னியின் சக்திக் குறைவால் அடி முதுகு வலி ஏற்படலாம். நரம்பு களிலும் எலும்பு களிலும் கால்சிய த்தின் அளவு குறையலாம். 

செவித்திறன் குறைய லாம். பித்தப்பை யின் சக்திக் குறைவி னால் உடம்பில் அளவுக் கதிகமான கொழுப்புப் படிமம் ஏற்படலாம். 

நமது உடலில் தசை நார்களின் கட்டுப்பாடு பித்தப்பையில் இருப்பதால் தசை நார்களின் ஆற்றல் குறைய லாம். 

இத்தனை சிரமங் களையும் ஏற்றுக் கொண்டு சிசேரியன் தேவையா?

சிஷேரியனு க்கு மருத்துவர் களின் பணம் பண்ணும் ஆசை தான் முக்கிய காரணம் என்று சொல்வதை என்னால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. 
சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தர வர்க்கத் தாய்மார்கள் தாங்க ளாகவே முன் வந்து சிசேரியன் மூலம் 

குழந்தை பெற்றுக் கொள் கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக் கொண்டு வந்திருக் கின்றன.

இதற்கு முதன்மை யான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்க முடியாதது தான் என்றா லும்,

சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்று க்கொள்வதைத் தனது செல்வச் செழிப்பின் 

ஒரு குறியீடாகக் கொள்வ தாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கி ன்றன. 

(அப்பல்லோ வில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமை யாக சிலர் சொல்வதைக் கேட்டிருக் கிறேன்)..

இன்னொரு முக்கிய மான செய்தி, ஜோதிடம் என்ற மூட நம்பிக்கை யினால் விளைவது. 

சில குடும்பங்கள் தங்கள் ஜோதிட ர்களிடம் ஆலோசனை செய்து சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என 

நினைத்து மகப்பேறு மருத்துவர் களிடம் சிசேரியன் பிரசவம் தான் செய்ய வேண்டும் என்று வலியு றுத்துவதும் நடை பெறுவது முண்டு.

இது போன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூட நம்பிக்கையில் நாகரிகம் என்ற 

பெயரில் தெரிந்தே இது போன்ற ஆபத்துக் களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கி றார்கள். 

நண்பர்களே ஒரு வேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இது போன்ற எண்ணங் களில் இருந்தாலோ 

அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்தி விடுங்கள். அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கை முறை மாறுகிறது .

இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம். 

அறிவியல் வளர்ச் சிகளை நம்மால் இயலாத செயல் களை செய்வதற்கு பயன் படுத்துங்கள். 
நம்மால் இயன்ற செயல் களை அழிக்கும் வகையில் அவை அமைய வேண்டாம் . 

அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர் களாகிய நாம் முழுவதும் அழிந்து 

நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக் கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல் படுங்கள் . 

இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கை யுடன் இணைந்து 

இனிமை யாக வாழுங்கள். இயந்திரங் களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .

சில நேரங்களில், தவிர்க்க முடியாத காரணங் களால் சிசேரியன் தவிர்க்க முடியாது தான்.

குழந்தை யின் தலை திரும்பாத நேரங்களில் சிசேரியன் தவிர்க்க முடியாது. 

ஆனாலும் இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்கத், துவிபாதபீடம் நல்ல மருந்து. 

இடம் மாறியுள்ள சிசுவை சரியான நிலைக்குத் திருப்பி விடுவ தற்குத் துவி பாத பீடம் , வெற்றி கரமாக கையாளப் பட்டுள்ளது. 

முதல் இரண்டு மாதங்கள் துவிபாதபீடம் செய்பவர் களுக்கு சிசேரியன் செய்யத்  தேவை யில்லை என்பதை என்னால் உத்திர வாதத்துடன் உறுதி கூற முடியும். 
குழந்தை கொடி சுற்றி பிறக்கிறது என்று சொல்கி றார்களே, இந்த நிலையை ஹஸ்த பாதபீடம் சரி செய்யும்.
Tags: