கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் போக்க !

Fakrudeen Ali Ahamed
இன்றைய கால கட்டத்தில் கணினியில் வேலை பார்ப்பவர் களுக்கு விரைவில் கண்களுக்கு கீழே கரு வளையம் வந்து விடுகிறது.
இதனை போக்க வீட்டில் கிடைக்கும் பொருட் களை கொண்டு தீர்வு காண முடியும். அவை என்ன வென்று பார்க்கலாம்.

1. கண் கரு வளையம் நீங்க சந்தனக் கல்லில் சாதிக் காயை அரைத்து பூசி வந்தால் கரு வளையம் விரைவில் மறையும்.

2. நந்தியா வட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாச மாகும்.

3. வெண்ணெ யுடன் கொத்த மல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கரு வளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

4. பாதம் பருப்பு களை பாலுடன் சேர்த்து ஊற வைத்து அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கரு வளையம் மறையும்.

5. வெள்ளரிக் காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச் சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்.

6. கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.
7. திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

8. உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை

கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் சிகப்பும் மாறும்.

9. தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கை களைக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு

கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும், இவ்வாறு 5-6 முறை செய்யவும்
Tags: